“இறை நம்பிக்கை கொண்டவர்களே! முழுமையான உள்ளத்துடன் இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.”
மேற்கூறிய திருக் குர்ஆன்- அல் பகரா வசனம் 209 ஐ ஓதிக் காட்டியவர்களாக
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! முழுமையான உள்ளத்துடன் இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.”
மேற்கூறிய திருக் குர்ஆன்- அல் பகரா வசனம் 209 ஐ ஓதிக் காட்டியவர்களாக
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அதிகமான யூகங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சில யூகங்கள் பாவமாகும். பிறர் குற்றங்களைத் தேடியலையாதீரகள். உங்களுள் ஒருவருக்கொருவர் புறங்கூறாதீர்கள். உங்களுள் எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக் குறித்து இவ்வாறு கூறப்பட்டால்) நீங்கள் நிச்சயமா அதனை வெறுப்பீர்கள் மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் அதிகமாகக் கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். (49:13).
வல்ல இறைவனின் மேலான அருளை பெற்ற நன்மக்களாக இம்மையிலும் மறுமையிலும் திகழ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுகள்:
"அல்லாஹ்வின் வழியில் உங்களது எல்லா ஆற்றல்களையும் சக்திகளையும் வாழ்நாள் இருக்கின்ற வரை அர்ப்பணித்து விடுங்கள். அதன் மூலம் அந்த தூய வாழ்வின் வாரிசாகி விட வேண்டும்." (அல் ஹகம் தொகுதி 4 எண் 29; 16 ஆகஸ்ட் 1900 பக்கம் 3; மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 90)
“அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப் படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன்பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.”(24: 56)
ஆட்சிமுறையில் புரட்சி என்பதே இந்த உலகில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் குறிக்கோளாகும். (‘எழுந்து புதிய உலகத்தை உருவாக்குவீராக’ என்பது இதன் அர்த்தங்களில் ஒன்றாகும்').
இன்று நாம் அல்லாஹ்(ஸுப்ஹா)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் (மாற்றமான) எதிர்ப்புணர்வு கொண்டுள்ள