மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை

மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை

இரண்டாம் அமர்வு 

2.15 மணியளவில்

வல்ல இறைவன் துணையுடன்...

1. ஜனாப். முக்தாருதீன் சாஹிப் கோவை, மாநில நாயிப் அமீர் அவர்கள் தலைமையில்

2. ஜனாப். கலீல் ரஹ்மான் சாஹிப் கோட்டார் அவர்கள் மாநில தப்லீக் செயலாளர் மற்றும்

3. ஜனாப். ஷா நவாஸ் சாஹிப், மாநில பொருளாளர் ஆகியோருடைய துணை தலைமையில்


ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத் ஓதினார்கள்

ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி ) வாசித்தார்கள்

ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்) மிகவும் உணர்ச்சி பொங்க வழங்கினார்கள்.

ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத்


ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி)

ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்)

வரவேற்புரை

ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை வழங்கி நபிமார்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகள் சிலவற்றை வழங்கினார்கள்

ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை

உரை

ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை

"இறைவன் பேசக்கூடியவன்" என்ற தலைப்பில் இறைவன் எப்போதும் பேசக்கூடியவன் என்பதை குரான் ஆதாரத்துடன் எடுத்து கூறி, இப்போதும் அவனது நல்லடியார்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை யதார்த்தத்துடன், நமது சகோதர, சகோதரிகள் பெற்ற கனவு, கஷப் காட்சிகள் சிலவற்றை உதாரணத்துடன் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.

ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை, உரை - "இறைவன் பேசக்கூடியவன்"

மதியம் 3.30 தேநீர் இடைவேளை

மதியம் 3.45

ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு கேரளா, அவருடைய இனிமையான குரலில் சிறப்பானதொரு நஸம் வழங்கினார்கள்.

ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு, கேரளா - நஸம் 

மாலை 4 மணி 

பிற பிரிவு ஜமாத்திலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் தங்கள் அனுபவங்கள், மற்றும் சந்தேகங்களை தெரிவித்தனர்.

மாலை :4.30

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இந்த கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வழங்கிய சிறப்பான வாழ்த்துறையின் தமிழாக்கம் ஜனாப். சலீம் சாஹிப் மாநில அமீர் அவர்கள் வழங்கினார்கள்.

ஜனாப். ஸலீம் சாஹிப் மாநில அமீர் - கலீஃபதுல்லாஹ் வழங்கிய வாழ்த்துறையின் தமிழாக்கம்

மாலை 4.45

 பையத் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக கோவையை சார்ந்த ஜனாப். ரஃபிக் சாஹிப் அவர்கள், இந்த நூற்றாண்டின் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களை ஏற்று, பையத் (உடன்படிக்கை) செய்து கொண்டு, அருளுக்குறிய நூஹ் (அலை) அவர்களின் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார்கள். வந்திருந்த ஜமாத் சகோதரர்கள் அனைவரும் அந்த பையத் (உடன்படிக்கையை) செய்து கொண்டதின் மூலம் தங்கள் உடன்படிக்கையை புதுப்பித்து கொண்டனர்.

ஜனாப். ரஃபிக் சாஹிப், கோவை - பையத் (உடன்படிக்கை) செய்த நிகழ்ச்சி

துவா மற்றும் முஸஃபா (வாழ்த்து) உடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் தமிழ் நாட்டின் அனைத்து கிளை சகோதரர்களும், கேரளா ஜமாத்தை சார்ந்தவர்களும் இஸ்லாத்தின் பிற பிரிவை சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர். வல்ல இறைவனும் அவனுடைய மலக்குகளுடன் இந்த அருளுக்குறிய கூட்டத்தை ஆசீர்வதித்தான். என்ற நம்பிக்கையுடன். நிறைவு செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த மேலான இறை பணிக்காக இரவும் பகலும் அரும்பாடு பட்ட ஜமாத் சகோதர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலான நற்கூலியை வளங்குவானாக... குறிப்பாக மாநில அமீர் ஜனாப். சலீம் சாஹிப், கோவை ஜமாத் அமீர் ஜனாப். அப்துல் ரஹ்மான் சாஹிப், ஜனாப். அனீஸ் சாஹிப் மற்றும் ஜனாப். அலாவுதீன் சாஹிப் ஆகியோர் தங்களின் பல பணிகளுக்கு மத்தியில் இறை பணிக்காக அதிக தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுடைய தியாகங்களை வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக.. ஆமீன்...

மாலை 5.30

உலகில் எத்தனையோ கூட்டங்கள் அன்றாடம் நடைபெறுகிறது. ஆனால் எத்தனை தடைகள்..., சோதனைகள்.., வந்தாலும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனின் திருப்பொருத்தம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு உண்மை இஸ்லாத்தின் வழியில் ஒன்று கூடிய ஆன்மீக பறவைகள் இந்த செய்தியை எடுத்து கொண்டு... இதே ஆன்மீக தாகம் கொண்ட இன்னும் பல பறவைகளை ஒன்றிணைத்து... மீண்டும் விரைவில் கூட... வல்ல இறைவன் அருள் பிரிவானாக...!!! ஆமீன்...!!! சும்ம ஆமீன்...!!!யா ராப்புளாலமீன்...!!!

வஸ்ஸலாம்.. ஜஸாக்கல்லாஹ்... ஹைர்...