இறைவன் மீது உண்மையான அன்பு!

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

நீங்கள் (ஒரே நேரத்தில்) இரண்டு பொருட்கள் மீது அன்பு கொள்ள முடியாது. உங்களால் (ஒரே நேரத்தில்) செல்வத்தின் மீது அன்பு கொள்வதும், இறைவன் மீதும் அன்பு கொள்வது என்பது சாத்தியமற்றதாகும். ஒன்றின் மீது மட்டும்தான் உங்களால் அன்பு செலுத்த முடியும். ஆக இறைவன் மீது அன்பு செலுத்தக்கூடிய மனிதர் பாக்கியசாலி ஆவார். ஒருவர் இறைவன் மீது அன்பு செலுத்தி அவனது வழியில் செல்வத்தை தியாகம் செய்வார் என்றால் மற்றவர்களை விட அவரது செல்வத்திலும் அதிகளவு அருள் வழங்கப்படும் என நான் நம்பிக்கை கொள்கின்றேன். ஏனென்றால் செல்வம் தானே வராது இறைவனுடைய விருப்பத்திற்கேற்பவே வருகிறது.

(மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 497)