ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதம் பிறை 4, 2021 ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை மாலை 6.05 மணியளவில் இறை புறத்திலிருந்து பெற்று இறைச் செய்தியை வழங்கிய படி...
ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்..
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணை காட்டுபவனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால்...
இவ்வுலகின் அனைத்து தேசங்களிலிருந்து, பூமியில் வாழும் எனது அன்பான மனித இனமே, கேளுங்கள்! முதலில், ஏகனாகிய, ஒரே ஒருவன் நமது உண்மையான படைப்பாளன் மற்றும் பிரபஞ்சத்தின் அனைத்து தற்காலிக மற்றும் போலி தெய்வங்களுக்கும் இறைவனாகிய அந்த ஒரே ஒருவனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவனே (வல்ல இறைவன்), நம்மையும், தாங்கள் பல சோதனைகளை கடந்து சென்றாலும், மக்கள் அவர்களை ஏளனம் செய்தாலும் அவர்கள் மீது பழிகளை சுமத்தினாலும் அவனது கலீபத்துல்லாஹ்வை நேசித்து, அவனது கலீபத்துல்லாஹ்வுக்கு கீழ்படிந்து, அவனது கலீபத்துல்லாஹ்வுடன் நெருக்கமாக பணிகளை மேற்கெள்கின்றவர்களையும் (இறைவன்) நேசிக்கிறான். நான் உங்களிடம் அல்லாஹ் (தபாரக)வின் பெயரில் சத்தியம் செய்து கூறிக் கொள்கிறேன்: அல்லாஹ் என்னுடன் பேசுகிறான் என்றும், மேலும் அவனுடைய காரியத்திற்காக உழைப்பவர்களை நேசிக்குமாறும் எனக்கு வெளிப்படுத்தினான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையில், கலீபத்துல்லாஹ் உங்களை நேசிக்கிறார், உங்களது பணிகளில் மகிழ்ச்சியடைகிறார், அல்லாஹ் (தபாரக)வும் அவனது வானவர்களும் கூட உங்களது பணிகளில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட
கீழ்ப்படியாத கவனக்குறைவான மக்களாக மாறி விடாதீர்கள்!, ஆனால் காலத்தின் இந்த இறை அருளைக் கொண்டு அல்லாஹ் (தபாரக) உங்களையும், நம் அனைவரையும் பாதுகாக்கவும், இறுதி நாளுக்கு அதாவது மறுமை நாளுக்கு முன் வாக்குறுதி அளித்தபடி இந்த உலகத்தில் சுவர்க்கத்தின் ராஜ்யத்தை மற்றும் ஆட்சியை நமக்கு காட்டவும் அல்லாஹ்(தபாரக) முடிவு செய்துள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!.
எனவே, நமது இரட்சகனான, ஒரே ஒரு படைப்பாளனாகிய அந்த இறைவன், அவனது மாபெரும் பணிக்காக அவனது கலீபத்துல்லாஹ் முஹையுத்தீன், மஸீஹ், மஹ்தி மற்றும் ரசூலாக என்னை இக்காலத்தில் தேர்ந்தெடுத்துள்ளான். எனது 7வயதிலிருந்து எனக்கும் அவனுக்கும் அதாவது இறைவனுக்கும் இடையேயான எனது ஆன்மீக நேசத்தின் உறவை வெளிப்படுத்த நான் ஒருபோதும் விரும்பவில்லை. நான் உங்களைப் போன்றவன், உங்கள் அனைவரையும் போன்ற ஒரு மனிதனாவேன். எனது குழந்தை பருவத்திலிருந்தே, இப்போது வரை நான் பல வகையான சோதனைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஆயினும் சோதனைகள் எதுவாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரியே, நான் ஒருபோதும் சோர்வடையவோ அல்லது எனது படைப்பாளன் மீதான எனது நம்பிக்கையை இழக்கவோ இல்லை.
இறைவன் நம் அனைவரையும் நேசிக்கிறான், ஆனால் எனது இறைவன் எனது நேசத்திற்குரிய இறைவன் இக்காலத்தில் என்னை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளான் என்று எனது இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரில் நான் சத்தியம் செய்கிறேன், மேலும், சோதனைகள், பிரச்சனைகள் பூகம்பங்கள் போன்றவற்றைக் கொண்ட கடைசி காலமாகும் இது என்பதை நான் உங்களிடம் கூறிக்கொள்கிறேன். மேலும் நான் இக்காலத்தின் பிர்அவ்ன்கள் பலருடனும் போராட வேண்டும். பலமுறை ஆன்மீக வெளிப்பாட்டின் ஆரம்பத்திலிருந்தே இறைவன் எனக்கு இதனை
"வைரமே வைரத்தை வெட்டும்"
என்று வெளிப்படுத்தியிருந்தான். முதலில் எனக்கு அது புரியவில்லை. ஆனால் இப்போது, அது வார்த்தைக்கு வார்த்தை நடந்து கெண்டிருப்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் அல்லாஹ்வின் வழியில் எனது முழு வாழ்வையும் விட்டுவிட வேண்டியது ஏற்பட்டாலும்.., எனது இரத்தத்தை சிந்த வேண்டியது ஏற்பட்டாலும்... அல்ஹம்துலில்லாஹ்...!!!
ஆதாரம் : 13.8.21 ஜும்மா குத்பா
தலைப்பு : சைத்தானின் திட்டமும் அவனது படையும்