பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால், ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம், தமிழ் நாடு சார்பாக, மாநில அளவிலான தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 01.10.2023 ஞாயிற்று கிழமை அன்று கோயம்புத்தூரில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
முதல் அமர்வு
காலை சரியாக 9.40 மணியளவில், வல்ல இறைவனின் துணையுடன்
1. மாநில அமீர் முகரம் ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் தலைமையில்
2. கோவை அமீர் ஜனாப். அப்துல் ரஹ்மான் சாஹிப் மற்றும்
3. மாநில தர்பியத் செயலாளர் ஜனாப். நூர்தீன் சாஹிப் ஆகியோருடைய துணை தலைமையில்
ஜனாப். அலாவுதீன் சாஹிப் கோவை திருக்குரான் திலாவத் ஒதினார்கள்
ஜனாப். ஷா நவாஸ் சாஹிப் மேலப்பாளையம் அஹத் (உறுது மொழி) வாசித்தார்கள்
ஜனாப். சபீர் சாஹிப் மேலப்பாளையம் நஜம் வழங்க துவா உடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது
உரை 1 :
ஜனாப். முக்தாருதீன் சாஹிப் மாநில நாயிப் அமீர் சாஹிப் அவர்கள் "காலத்தின் இமாமின் தேவை" என்ற தலைப்பில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இமாமின் தேவை என்பதை திருக்குரான் வசனங்களில் இருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தொகுப்பு, ஹஸ்ரத் மசிஹ் (அலை) அவர்கள் கூற்றுகளில் இருந்தும் அழகிய முறையில் விளக்கினார்கள்.
ஜனாப். முக்தாருதீன் சாஹிப் மாநில நாயிப் அமீர் சாஹிப் அவர்கள் "காலத்தின் இமாமின் தேவை"
தேநீர் இடைவெளிக்கு பின்உரை 2 : ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் மாநில அமீர்.
"திருக்குரானில் இருந்து சீர்திருத்தவாதி"
என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியாக ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய புதிய தொழில் நுட்பத்தில் ஒரு அறிக்கையை (Presentation) வழங்கினார். இஸ்லாம் மார்க்கத்தின் தோற்றம் மற்றும் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலை) அவர்களின் ஆன்மிக சந்ததிகளில் நபிமார்கள், முஜதித்மார்கள் மற்றும் மார்க்க சீர்திருத்தவாதிகளின் வருகை எவ்வாறு தொடர்கிறது என்பதை திருக்குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் ஹஸ்ரத் மசிஹ் (அலை) அவர்களின் கூற்றுகளிலிருந்து எடுத்து காட்டி, இந்த நூற்றாண்டில் இறைவனின் மாபெரும் அருளாக தோன்றி உள்ள காலத்தின் இமாம், முஜத்தித் ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹமது அஜிம் (அலை) அவர்களின் வருகை எவ்வாறு பொருந்துகிறது என்பதை மற்ற பிற புரிவு ஜாமத்தில் இருந்து வந்திருந்த சகோதரர்களுக்கும் புரியும் படி அழகிய முறையில் விளக்கி கூறினார்கள்.
"திருக்குரானில் இருந்து சீர்திருத்தவாதி" என்ற தலைப்பில் ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் மாநில அமீர் அவர்கள்
தப்லீக் பிரிவு மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் இது அதிக பயனுள்ளதாக இருந்தது.. இது போன்ற அறிக்கைகள் இன்னும் அதிக அளவு நடைபெற வேண்டும். இன்ஷாஅல்லாஹ்...
மதியம் 12.45 மணிக்கு பாங்கு கூறி லுஹர் மற்றும் அஸர் தொழுகை ஜம்மு செய்து தொழபட்டது.
மதியம் 1.15 க்கு மணிக்கு ஆன்மீக உணவுக்கு மத்தியில் பௌதீக உணவும் சிறப்பாக வழங்கபட்டது.