முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களின் தூதுச்செய்தி

இறை வெளிப்பாடுகள், அறிவுரைகள்
மற்றும் எச்சரிக்கைகள்:

எனது அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! குழந்தைகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

(சாந்தி, கருணை மற்றும் இறைவனின் அருள்கள் உங்கள் மீது நிலவட்டுமாக!) அல்ஹம்துலில்லாஹ்! மார்ச் 08, 2020 அன்று லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்குப் பின்னர், என்னைப் படைத்த ரப்புல் ஆலமீனிடம் பல்வேறு துஆக்களை செய்த பிறகு, அல்லாஹ் (தபாரக்) எனக்கு பல இறை வெளிப்பாடுகளை வழங்கினான். இந்த வஹீகள் என்னை துன்பத்திற்குள்ளாக்கிய பல கடினமான சோதனைகளுக்கும், (அதன் காரணமாக) என்னுடைய உடல்நலம் பாதிப்படைந்ததற்குப் பிறகு வெளிப்படுத்தப்பட்டன; அவற்றை எல்லாம் நினைத்து, என் கண்களில் கண்ணீர் மல்க, நான் அல்லாஹ்வை வேண்டி அவனுடைய ஒப்பற்ற (அசாதாரணமான) உதவியை நாடினேன். பிறகு நான் ஒரு பலவீனமான நிலையில் வீழ்ந்து விட்டேன். இந்த நிலையில்தான், அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், சர்வ வல்லமை மிக்க இறைவன், ஓர் அசாதாரணமான வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் சமஸ்கிருதத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்தி எனக்கு உள தைரியத்தை வழங்கினான். இந்த நறுமணம் வெளிப்பட்ட பொழுது, நான் புகைப்படலத்தையும் கண்டேன். அதன் பிறகு தான், இந்த வெளிப்பாடுகள்

சமஸ்கிருதத்தில் என் மீது இறங்கியது:

"யவத் ஸ்தஸ்யந்தி ஜிராயா சரிதாஷ் சா மஹிதலே தவாத் ராவத் பகவான்கதா லோகேஷு ப்ரச்சரிஷ்யதி."

பூமியின் மீது மலைகளும் ஏரிகளும் இருக்கின்ற வரை, சர்வவல்லமையுள்ள இறைவன் இந்த உலகத்தில்அவனது ஒளியை அனுப்புவான்.

அஸதோ மா ஸத் கமாயா, தமாஸோ மா ஜ்யோதிர் கமாயா, மிரித்யர்ம அம்ரிதம் கமாயா.

உண்மையற்றவற்றிலிருந்து என்னை சத்தியத்தின் பக்கம் வழிநடத்துவாயாக! இருளில் இருந்து ஒளியின் பக்கம் வழிநடத்துவாயாக!! மரணத்திலிருந்து என்னை நித்தியதின் (முடிவில்லா வாழ்வின்) பக்கம் வழிநடத்துவாயாக!

பின்னர், அல்லாஹ் எனக்கு (இவ்வாறு) வெளிப்படுத்தினான்:

“அல்லாஹ்(அவனே எந்தத்) துணையும் இன்றி அவனது கலீஃபாவைத் தேர்வுசெய்கிறான். அது மனித கரங்களால் அல்ல. இது அல்லாஹ்வின் அருளாகும்; (அது) அதற்கு தகுதியானவருக்கு உரியதாகும். அல்லாஹ் (தபாரக்வதாலாவால்) தேர்ந்தெடுக்கபட்ட கலீஃபா உயிர் கொடுப்பவர் (ஆன்மீக) ஆவார். எனவே இதில் எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை."

"மனிதர்களின் கைகள் செய்த செயல்களின் காரணத்தால் கடலிலும் நிலத்திலும் குழப்பம் தோன்றியுள்ளது. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்களின் செயல்களுல் சிலவற்றை அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (திருக் குர்ஆன் 30:42)

"கொரோனா வைரஸ்"

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தின் போது 'மனிதகுலம் ஆபத்தில் உள்ளது.' அதனால் மனிதகுலத்தின் மீது பொதுவாக ஒரு கொடிய வைரஸ்(கிருமி) விழும் (அதாவது தாக்கும்) என்று அல்லாஹ் (சுப்ஹான) பல முறை (எனக்கு) வெளிப்படுத்தினான். 2002 முதல் 2003 ஆம் ஆண்டு வரை, மனிதகுலத்தையும் அதுவும் குறிப்பாக நம்பிக்கையாளர்களை எவர்கள் துன்புறுத்தினார்களோ அவர்களை எச்சரிக்க மீண்டும் மீண்டும் ஃகலீஃபத்துல்லாஹ்விற்கு (அதாவது இந்த எளிய அடியானுக்கு) இறைவெளிப்பாடு வந்தது. இன்று நாம் அறிந்த (இவ்)உலகம் முந்தைய நூற்றாண்டின் உலகத்திலிருந்தும் மிகவும் வேறுபட்டுள்ளது. உலகம் எல்லாத் துறைகளிலும் முறையாக வளர்ச்சி அடைந்ததுடன் இறைவனின் திருப்திக்கு வழிவகுக்கும் பாதையிலிருந்தும் மக்கள் விலகிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் தூய்மை மற்றும் நல்லொழுக்கத்தின் வரம்புகளை மீறிவிட்டார்கள். புனிதப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை முறித்துவிட்டார்கள். மேலும், இவ்வுலக பொருட்களின் மீது இந்நாள் வரை மிகுந்த நேசத்துடனும், தற்பெருமையுடனும் சுய திருப்தியுடனும் கூடியதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே அவனது பார்வையின் கீழ் இறைக் கட்டளைகளைப் புறக்கணிப்பதன் மூலமும், பெருங் கொடுமையான செயல்களைச் [அதாவது கடுமையான குற்றங்களைச்] செய்வதன் மூலமும், ஒரு வெளிப்படையான கிளர்ச்சி மற்றும் வெட்கமில்லாத இழிசெயல்களினால் அவனை புண்படுத்தியதன் காரணத்தினாலேயே ஆகும்.

மக்களின் பெளதீக மற்றும் மார்க்க நல்வாழ்வை நெறிப்படுத்துவதற்காக இறைவன் அனுப்புகின்ற அவனது (வழிகாட்டும்) தலைவர்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீது இறைவனின் பழிவாங்குதல் (தகுந்த தண்டனை) விதிக்கப் படுகின்றது. இந்த மக்கள் கிளர்ச்சி செய்வதோடு கட்டளைகளையும் தகர்த்து (பயனற்றதாக்கி) விடுகின்றார்கள். அவர்கள் சட்டவிரோதம், அநீதி மற்றும் கர்வத்துடன் செயல்படுவதன் மூலம் எதிர்ப்பு மற்றும் விரோதத்தைக் கொண்டு முன்னேற்றத்தை தடுத்துவிடுகின்றார்கள். அவ்வாறு செயல்படும் போது இறைவனால் நிறுவப்பட்டுள்ள தொடர்பையும் துண்டித்து விடுகின்றார்கள். சர்வ வல்லமையுடையவனின் எல்லையற்ற ஞானத்துடன் கொண்டு வந்துள்ளவற்றை நிராகரித்துவிடுகின்றார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவனது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தத் தெளிவானதும் அசைக்க முடியாததுமான வாதங்களுடன் தோன்றக் கூடிய இறைத்தூதரை நிராகரிப்பவர்களின் மீது இறைவனின் கோபம் விழுகிறது. அவர்கள் அவருடைய அடையாளங்களை தங்களது சொந்த குறைமதி மனப்பான்மையைக் கொண்டு மறுக்கின்றார்கள்; அவர்கள் அவரை அவமதிக்கிறார்கள்; அவரை தண்டிக்கிறார்கள்; அவரை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அவரை மார்க்கத்தின் எதிரி என்று அறிவிக்கிறார்கள். இன்னும் அவரது கொலை செய்ய கூட திட்டமிடுகிறார்கள்.

உலகின் பல பெரிய நாடுகளையும், மிக சக்திவாய்ந்த நாடுகளையும் தங்களது முழங்கால்களுக்குக் (கீழ்) கொண்டு வந்திருக்கின்ற, இறைவனின் கோபத்திற்க்கு முன் உதவியற்றதாக்கியுள்ள அத்தகையதொரு வைரஸ்(கிருமி) தான் கொரோனா வைரஸ் ஆகும். உலகில் சக்திவாய்ந்தவர்கள் என்று வாதம் செய்பவர்களே! நீங்கள் பூமியில் தெய்வங்கள் என்று கூறிக்கொள்பவர்களே! மீண்டும் சிந்தித்துக்கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையிலேயே சக்திவாய்ந்தவர்கள் என்றால், ஏன் இவ்வளவு பயம் (உங்களுக்கு)? பள்ளிக்கூடங்கள், கிடங்குகள், பல்பொருள் அங்காடிகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை ஏன் மூடுகின்றீர்கள்? உங்களையே நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் செல்வச் செழிப்புடையவர்களாகவும் கருதுகிறீர்கள் என்றால் ஏன் இவ்வளவு பயம்? சர்வதேச விமான நிறுவனங்களின் முன்பதிவுகள் இப்போது குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட பயம் நிலவுகின்றது. முன் பதிவுகள் (எல்லாம்) கீழே குறைந்து வருகின்றது. மக்கள் பயணம் செய்வதற்கு முன்பே தயங்கு கின்றார்கள். மேலும், சிலர் தங்கள் பயணங்களை தாமதப்படுத்த விரும்பு கின்றார்கள்.

பல நாடுகளில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், சீனா, இத்தாலி இன்னும் மற்ற பல நாடுகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தங்களது நாடுகளில் ஏற்படுத்திய இறப்புக்களின் எண்ணிக்கையை குறித்த உண்மையை வெளிப்படுத்தாத அரசாங் கங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு குடும்பத்தின் ஒவ்வொரு நாட்டின்(சிறிய,பெரிய நாடுகள், மற்றும் தீவுகளிலும் கூட அனைவரது) உள்ளத்திலும் ஒரு பயம் (உண்டாகி) உள்ளது.

பல்வேறு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் என்ற ஒரு கொள்ளை நோயை சர்வ வல்லமையுள்ள இறைவன் அனுப்பியுள்ளான். இந்த வைரஸ் அதனுள் எந்த வித அனுதாப உணர்வும் கருணையும் முழுமையாக இல்லாத நிலையில் வந்துள்ளது. (இது ஏனென்றால்) மக்கள் தங்கள் சக மனிதர்களின் சடலங்களை உண்ணக்கூடிய மிருகங்களாக மாறிவிட்டார்கள். மேலும் எந்த சமூக வேறுபாட்டையும் அங்கீகரிக்கவில்லை (என்பதாலும்).

எனவே, மனிதகுலம் அனைவரிடமும் நான் போகின்றேன்! கொரோனா வைரஸ் நிலை நாட்டப்பட்டுள்ளதையும், உலகம் முழுவதும் பரவி வருவதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்! அதன் கடுமையான தாக்குதல்கள் நிச்சயமாக உங்கள் அன்புக்குரியவர்களையும் விடவில்லை. மேலும், அவை உங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த சோதனையை உங்கள் மீது சுமத்தியிருப்பதன் மூலம் கருணையாளாளனும், ஞானம் மிக்கவனுமாகிய இறைவன், உங்களை கடும் சோதனைக்கு உட்படுத்தி கோபத்துடனும் பழிவாங்குதலுடனும் உங்களை சந்தித்துள்ளான்.

ஒரு இறைத்தூதரின் (வாழ்)நாட்களில் கொடிய தொற்றுநோய் தூய குர்ஆனிலும் (27:83) அதே போன்று பைபிளிலும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எடுத்துக்காட்டாக ஜகரியா (14:12), மத்தேயு (24:7). இந்த முன்னறிவிப்புகளின் உண்மைத் தன்மையை எவராலும் மறுத்துரைக்க முடியாது; அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு உலகியல் வழிமுறைகளின் உதவியையும் நாடாமலிருப்பது எனக்கும், அதே போன்று எனது உண்மையான ஸஹாபிகளுக்கும் கடமையாகும்.

கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டால்,(அதற்கு) மருந்து அல்லது தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்று நான் அறிவிக்கவில்லை. இறைவனால் பரிகாரம் வழங்கப்படாத எந்த நோயும் இல்லை என்றே இஸ்லாத்தின் பரிசுத்த தூதர் எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், இறைவன் எனக்கும் எனது உண்மையான சஹாபாக்களுக்கும் கொடுத்திருக்கும் இந்த வானத்தின் அடையாளத்தை தடுப்பூசி மூலம் மறைப்பதை நான் பாவமாக கருதுகிறேன். இதன் மூலம் என்னை உண்மையாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவனால் தேர்ந்தெடுத்தற்குரிய தயவை (உதவியைக்) காட்ட அவன் விரும்புகின்றான். எனவே தடுப்பூசிக்கு அடிபணிவதன் மூலம் இறை கருணையின் இந்த அடையாளத்தை அவமதிக்கவும், இழிவுபடுத்தவும் என்னால் முடியாது. மேலும், அதனால் இறைவனின் வாக்குறுதியில் நம்பிக்கையற்ற குற்றவாளியாக இருப்பீர்கள்.

பொதுவாகவே இந்த கொள்ளை நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை என்பதை நான் அறிவேன். அதன் காரணமாக, தடுப்பூசியைக் காட்டிலும் சிறந்த தீர்வை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். இதைக் கருத்தில் கொண்டால், எனது (இந்த) முடிவானது அரசாங்க நடவடிக்கைக்கு முரண்பட்டதல்ல (என்பதைப் புரிந்துகொள்ள முடியும்). எனது சமதாயத்தைச் சார்ந்த மக்கள், இறை வெளிப்பாடுகளின் மீது உளப்பூர்வமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இந்நூற்றாண்டின் இறை அடியானாகிய இந்த எளியவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட (இந்த) அடியானுக்கு எதிராக வெளியில் பேசாதவர்கள், எனக்கு எதிராக சண்டையிடாமல் எனக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர்களாகிய இவர்களனைவரும், அவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருப்பினும் அவர்கள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள் என எல்லாம் வல்ல இறைவன் இறைவெளிப்பாட்டின் மூலம் எனக்கு அறிவித்துள்ளான். இன்ஷாஅல்லாஹ் இறைவனின் உதவியுடன் எனது உண்மையான அடியார்கள் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாக்கப்படுவார்கள்.

நான் சொல்வதை கேட்டு சிலர் ஏளனமாக சிரித்தாலோ, இன்னும் பிறர் என்னை பைத்தியம் என்று அழைத்தாலோ, என்னை ஏளனம் செய்தாலோ அந்நபரை அவன் தண்டிப்பான் என்றும், ஏற்கனவே எழுச்சியடைந்துள்ள அவனது கோபம் அவரை அழித்துவிடும் என்றும் அல்லாஹ்(ஸுபஹ்) எனக்கு வெளிப்படுத் தியுள்ளான். பல உயிர்கள் அழிக்கப்படும். ஆனால், அவன் என்னிடத்தில் கூறினான்;

“என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியானே! உம்மை உண்மையாக ஏற்றுக் கொண்டவர்களுக்காக, உமது இதயத்தை வருத்திக் கொள்ளாதீர்!அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்! அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்! குற்ற வாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று எண்ணிவிட வேண்டாம் [இறைவனின் ஏகத்துவத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக நம்பிக்கை யாளர்களை துன்புறுத்திய குற்றவாளிகள்]. நாம் அவர்களின் வீடுகளை நெருங்கி வருகிறோம். கொரோனா வைரஸின் நுண்ணுயிர் கொல்லியைப் பன்மடங்காக்கி எனது படைகளைத் தயார் செய்கிறேன். "மக்கள் இறந்து போன விலங்குகளைப் போல் தங்களது வீடுகளில் உயிரற்றவர்களாகக் காணப்படுவார்கள். அது இறைவனின் வெற்றிக்குரிய நாளாக இருக்கும்”.

அல்லாஹ்(ஸுபுஹ்) தொடர்ந்து கூறினான் நானே இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் [2001 ஆம் ஆண்டு முதல்] உம்முடைய சோதனைகளை அப்புறப்படுத்தியக் கருணையாளனாவேன், நிச்சயமாக நானே உம்மை ஃகலீஃபதுல்லாஹ்வாக, முஹைய்யுத்தீனாக உயர்த்தினேன். நிச்சயமாக, எனது தூதர்கள் என் இருப்பைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நானே உமதுப் பாதுகாவலனாவேன்; மேலும் நானே உமக்கு ஆதரவும் வழங்குவேன். நானே உம்மை அனுப்பினேன், நீர் எனது உண்மையை உலகிற்கு நிரூபித்தீர். உலகம் உம்மைப் புகழ்ந்து போற்றும் அளவிற்கு, நான் உம்மை ஒரு மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நேரம் வரும். உமது கண்ணீரை சிந்த வேண்டாம், ஏனென்றால் இந்த கண்ணீர் உமது எதிரிகளை மூழ்கடிக்கும் வெள்ளமாக மாறிவிடும். உமக்கு சிரமங்களை கொடுத்தவர்கள் [அதாவது: உமக்கு சீர்குலைவை ஏற்படுத்தியவர்களையும்] உமது முடிவை காண விரும்பிய நபர்கள், இந்த மக்களை நான் கவனித்துக் கொள்வேன். உமது நம்பிக்கையை என்னிடத்தில் மட்டுமே வைப்பீராக! உலக சோதனைகள் தொடரும், ஆனால் மறந்துவிடாதீர்! மேலும் உறுதிப்படுத்திக் கொள்வீராக எனது கலீஃபதுல்லாஹ்வே! அது (என்னவென்றால்)வெற்றி உம்மிடமும், தோல்வி உமது எதிரிகளிடமுமே உள்ளது! இந்த நாளின் வெளிப்பாட்டிற்காக பொறுமையுடன் காத்திருப்பீராக! இது உம்மைப் படைத்தவனிடமிருந்துள்ள (இறை) வெளிப்பாடாகும்”.

மனிதகுலமே! மக்கள் இறைவனின் தூதரை (அவனுடைய ஃகலீஃபத்துல்லாஹ்வை) ஏற்றுக் கொண்டால் அல்லது அவர்கள் அவருக்கு எந்தத் தீங்கும் செய்யாமலிருந்தால், அவர்களுக்கு ஆன்மீக அருள் வழங்கப்படும் என்று சர்வவல்லமையுள்ள இறைவன் எனக்கு வெளிப்படுத்தியுள்ளான். உண்மை என்னவென்றால் இறைவனால் அனுப்ப்பட்ட நபியை நிராகரிப்பதால் இப்பூமியில் கடுமையான தண்டணை ஏற்பட்டுவிடாது. மறுபுறம், வரம்பு மீறுதல்கள், பழிச்சொற்கள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றவை இந்த பூமியை மரணத்தைக் கொண்டும் அழிவைக் கொண்டும் தண்டித்துவிடுகின்றன. எல்லா தீய செயல்களுக்காகவும் மக்கள் இப்போது மனந்திரும்பினால், இறைவன் இந்த கொடிய தொற்று நோயான: கொரோனா வைரஸை அகற்றிவிடுவான்.

ஆகவே, இறைவனின் எல்லையற்ற கருணையின் மூலம் அவன் நம்மையும் நமது நண்பர்களையும் இந்த கொடிய தீங்கிலிருந்து பாதுகாக்கும்படி நாம் துஆ செய்ய வேண்டும். ஆனால் ஞானமுள்ளவர்களாலும் தொலை நோக்குடையவர்களாலும் மட்டுமே (இதனைப்) புரிந்து கொள்ள முடியும். எனவே இறைவனுக்குப் பயந்து, சீர்குலைவையும், அழிவையும் கொண்டுவருகின்ற செயல்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். எனது பணியில் அலட்சியமாக இருந்ததாக நான் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க அதனை மீண்டும் உங்களிடம் கூறுவது எனது கடமையாகும்.

தன்னலமற்ற தன்மை, பிரார்த்தனை மற்றும் தானதர்மத்துடன் இந்த தீமையிலிருந்து ஈடேற்றத்தைத் தேடுங்கள். இறைவன் உங்கள் குறைகளை மன்னித்து உங்களை (தீங்கிலிருந்தும்)விடுவிப்பான். உங்கள் குறைபாடு களிலிருந்தும் விடுபட்டு,நீங்கள் பிறகு ஆன்மீக அருளுக்கும் சாட்சியமளிப்பீர்கள். இறை வார்த்தையின் தூண்டுதல்களால் நான் உங்களிடம் பேசியிருக்கின்றேன், எனது வார்த்தைகளின் உண்மைக்கு நீங்கள் விரைவிலேயே சான்றளிப்பீர்கள்.

நான் உங்களிடம் கூறியதுபோல், இறைவெளிப்பாட்டின் ஆரம்ப(கால)த்தில், கொடிய தொற்று நோய் குறித்து அல்லாஹ்(ஸுப்ஹ) மீண்டும் மீண்டும் எனக்கு வெளிப்படுத்தினான். ஆனால், முகந்திருப்பி இந்த வெளிப்பாடுகளின் உண்மைத்தன்மையை அங்கீகரிக்காதவர்களுக்கு அந்தோ பரிதாபமே! இந்த இறை வார்த்தைகளை பழைய கட்டுக்கதைகளாக ஆக்கியவர்கள் மீதும் பரிதாபமே!! அல்ஹம்துலில்லாஹ், "நான் இந்தியாவுக்கான பயணத்தின் போது, இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், கேரளாவின் நூருல் இஸ்லாம் பள்ளி வாசலில் வைத்து, ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் முன்பாக, அல்லாஹ்(ஸுபஹ்) மற்ற சில விஷயங்களுடன் இவ்வுலகை அழிக்கும் பேரழிவுகள் பற்றி மாண்டரின் மொழியில் எனக்கு வெளிப்படுத்தினான்."

"இறைவன் நமக்காக கட்டளையிட்டதைத் தவிர வேறு எதுவும் நமக்கு நடந்து விடமுடியாது." அவனே நம்முடைய அரசனும் நமது பாதுகாவலனும் ஆவான். இறைவன் மட்டுமே நமது நம்பிக்கைக்கு தகுதியானவனாவான். எனவே ஒரே இறைவனும், தனித்துவமான இறைவனுமாகிய அந்த இறைவன் மீதே உங்களது நம்பிக்கையை வைத்துவிடுங்கள். இறைவன் நாடினால், நீங்கள் உங்களை அவனுக்கு அர்ப்பணித்துவிட்டால், அனைத்துமே செயல்பட தொடங்கிவிடும். ஆகவே, “ஃபஸ்பிர் ஸப்ரன் ஜமீலா.”–அழகியப் பொறுமையை மேற்கொள்ளுங்கள். இன்ஷா- அல்லாஹ்.

அல்ஹம்துலில்லாஹ், நமது ஜமாத் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன (10 மார்ச் 2008-2020), நாளை மொரீஷியஸ் தனது 52 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது(மேலும் 28 ஆண்டுகால குடியரசு). நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்நாட்டிற்காக துஆ செய்வோம், மேலும் அல்லாஹ் தனது அடையாளங்களின் உண்மை மற்றும் அவனது ஏகத்துவத்தின் பக்கம் மக்களின் உள்ளங்களைத் திறப்பானாக! மேலும் அவன் எப்போதும் தனது நிழலின் கீழ் நம்மைப் பாதுகாப்பானாக! ஆமீன்! ஸும்ம ஆமீன்!

கவனித்து கேட்டமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.