உம்மத்தின் நோய்கள் (பகுதி 2)

10 ஜூன் 2022 / 09 துல் கஹ்தா 1443ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 2) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ். ஸும்ம அல்ஹம்துலில்லாஹ். தற்போதைய‌ காலகட்டத்தில் இஸ்லாத்தை பாதிக்கின்ற காரணங்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைத் தூண்டுவதற்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்துத் தொடர்ந்து எனது வெள்ளிக்கிழமை சொற்பொழிவை வழங்கும் தவ்ஃபீக்கை எனக்கு அளித்துள்ளான். இன்ஷா அல்லாஹ் படிப் படியாக நான் இந்தத் தலைப்பின் பக்கம் வருவேன்.

நான் கடந்த வெள்ளிக்கிழமை உங்கள் முன் மேற்கோள் காட்டியதைப் போன்றே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்".    (அல் மாயிதா 5: 79-80)

நமது தேசத்திற்குரிய நபி(ஸல்) அவர்கள் இந்த குர்ஆனிய வசனங்கள் குறித்து மேலும் விவரங்களை வழங்கி, அவற்றின் மீதான விளக்கத்தின் ஒளியை [i.e. புரிந்துணர்வை] வழங்கி யுள்ளார்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அறிவித்தார்கள்:

இஸ்ரவேல் சந்ததியினரைப் பாதித்த (மார்க்கத்தின்) வழியிலான முதல் குறைபாடானது, (அவர்களில் ஒரு) மனிதர் இன்னொருவரைச் சந்தித்து அவரிடம் கூறுவதாவது:

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதிலிருந்தும் விலகி இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல!பின்னர் அவர் மறுநாள் அவரைச் சந்திப்பார், அவரிடத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை,ஆயினும் இது அவருடன் (ஒன்றாக)உண்பதையும், அவருடன் குடிப்பதையும், அவருடைய சபைகளில் அமர்வதையும் தடுப்பதில்லை.இந்த நிலை வரும்போது, அப்படிப் பட்டவர்களுடன் அவர்கள் இணைந்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களின் இதயங்களை தீய வழிகளின் பக்கம் கொண்டு சென்றான்'.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் இதனை ஓதினார்கள்:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்." (அல் மாயிதா 5: 79-82)

அதன் பிறகு ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) தொடர்ந்தார்கள்:

“அவ்வாறன்று! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, அநீதி இழைப்பவரின் கையைத் தடுத்து அவர் நியாயமாகச் செயல்படுமாறு வற்புறுத்தவும், உண்மையைக் கடைப்பிடிப்பதற்கும் நீங்கள் சுமத்தப் படுகிறீர்கள் (வழி நடத்தப்படுகிறீர்கள்)

அல்லது அல்லாஹ் உங்களில் சிலரது உள்ளங்களை மற்ற(தீய)வர்களின் இதயங்களுடன் இணைத்து அவர்களை சபித்தது போல் உங்களையும் சபித்துவிடுவான்”. (அபூதாவூத், திர்மிதி)

[ஹஸ்ரத் ஜரீர்] கூறியதாக ஹஸ்ரத் ஜரீரின் மகனிடமிருந்துள்ள அறிவிப்பாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குற்றமிழைப்பவர்களைத் தடுக்கும் ஆற்றலும், திறனும் கொண்ட மக்களாக) அவர்கள் வலுவாகவும்,ஓர் உயர்ந்த அந்தஸ்துடனும், அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றவரை, பாவங்களைச் செய்தவர்களாகமாட்டார்கள், ஆனால், (அந்நிலையில்) அல்லாஹ் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்கியதாக எந்த சமுதாயமும் இல்லை'' (இப்னு மாஜா)

ஹஜ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கலிமா - லா இலாஹ இல்லல்லாஹ் - இதனை யார் ஓது கின்றார்களோ அவர்களுக்கு நன்மை பயக்கும்.மேலும் அவர்கள் எதுவரை அதன் உரிமைகளைப் புறக்கணிக்காமல் இருக்கின்றார்களோ அது வரையில் துன்பங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களில் இருந்தும் அவர்கள் பாதுகாக்கப் படுகின்றார்கள்".

ஸஹாபாக்கள் (ரலி) வினவினார்கள்: "அதன் உரிமைகளைப் புறக்கணித்தல்" என்பதன் பொருள் என்ன?" (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: “பாவங்கள் வெளிப்படையாகச் செய்யப்படும் போது, அவர்கள் அதனை ​​தடுத்து நிறுத்த மாட்டார்கள்,அவர்களை (பாவங்கள் செய்வதிலிருந்தும்) தடை செய்ய மாட்டார்கள்".

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அன்னாரது அருளுக்குரிய முகத்துடன் வந்தார்கள். ஏதோ மோசமான சம்பவம் நிகழ்ந்ததுள்ளது என்பதை உணர்ந்தேன். அன்னார் எதனையும் கூறவில்லை.ஒளு செய்துவிட்டு நேராக பள்ளி வாயிலுக்கு சென்றார்கள்.நானும் கூட அன்னார் என்ன கூறுவார்கள் என்பதைக் கேட்பதற்காக பள்ளி வாயிலின் சுவர் அருகே நின்றேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் மேடையின் மீது நின்று, அல்லாஹ்வைப் புகழ்ந்த பிறகு கூறினார்கள்:

"ஓ முஸ்லிம்களே! நன்மையை ஏவுமாறும், தீமையைத் தடுக்குமாறும் அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளான், அவ்வாறு இல்லையென்றால், ஒரு காலம் வரும் (அப்போது) நீங்கள் பிரார்த்திக்கும்போது [அவனை அழைப்பீர்கள்] ஆனால் அவன் [உங்கள் பிரார்த்தனைகளுக்கு] பதிலளிக்க மாட்டான், நீங்கள் அவனிடம் ஓர் ஆதரவைக் கேட்பீர்கள், (ஆனால்) அவன் அதனை உங்களுக்கு வழங்க மாட்டான், நீங்கள் அவனிடம் உதவியைக் கேட்பீர்கள், (ஆனால்), அவன் [உங்களுக்கு அந்த உதவியை செய்ய] மறுத்து விடுவான்".

ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எப்போது எனது உம்மத் இந்த உலகத்திற்கு [மறு உலகை விட] முன்னுரிமை கொடுக்கத் தொடங்குமோ, மேலும், அதனை கண்ணியத்திற்க்குரிய அடிப்படை ஆதாரமாகக் கருதத் தொடங்குவார்களோ, [அப்போது] [அல்லாஹ்வின் மீதான] அச்சமும், மற்றும் இஸ்லாத்தின் மீதான மதிப்பு [முக்கியத்துவமும்] அவர்களின் இதயங்களிலிருந்து மறைந்து போய்விடும். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதை விட்டுவிடும்போது, ​​அவர்கள் இறைவெளிப்பாட்டின் அருள்களை இழந்துவிடுவார்கள், மேலும் அவர்கள் ஒருவரையொருவர் விமர்சிக்கத் தொடங்கும்போது, ​​அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் இருந்து வீழ்ந்து விடுவார்கள்.”

இந்த பிரச்சினையின் (ஆணி)வேர் (எது?)

நான் உங்கள் முன் வைத்த ஹதீஸ்களில் இருந்து “அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்” (நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலாகிய) இந்தப் பணியை [மக்கள் மீது - முஸ்லிம்கள் மீது] கொண்டு வந்ததன் முதல் காரணம் கோபம், அதிருப்தி மற்றும் இறுதியில் அல்லாஹ்வின் சாபம் ஆகும். மேலும் உம்மத்-ஏ- முஹம்மதியாவைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் இந்தப் பணியை புறக்கணித்தால் அல்லது விட்டுவிட்டால், அவர்கள் அனுபவிக்கும் தண்டனை கடந்த கால சமூகங்களைக் காட்டிலும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் தங்கள் முதல் கடமையை அங்கீகரிக்கத் தவறிவிட்டனர் என்பதாலும், அவர்களது வாழ்க்கையின் ஒரேப் பணியை புறக்கணித்து விட்டனர் என்ற காரணத்தினாலும் ஆகும்.

இந்த காரணத்திற்காகவே, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் "அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" என்ற இந்தச் செயலை "தீன்-இ-இஸ்லாத்தின் அடிப்படையான மற்றும் மிகக் குறிப்பான அடையாளமாகும்" என்று கட்டளையிட்டு (அடிப்படைத்) தகுதியுடையதாக ஆக்கினார்கள். மேலும், இந்த பணியை விட்டுவிடுவது இஸ்லாத்தின் தரகுறைவையும், மறைவையும் ஏற்படுத்தி விடும்.

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் இவ்வாறுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவர் ஒருவர் ஒரு தீமையைக் கண்டாலும் அவர் கண்டிப்பாக அதனைத் தனது கைகளால் தடுக்கவேண்டும் வேண்டும் (மாற்ற); அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், அவரது நாவால் தடுக்க வேண்டும்; அவரால் அதனையும் செய்ய முடியவில்லை என்றால், பிறகு அவரது உள்ளத்தால் தடுக்க வேண்டும் (வெறுத்து விட ஒதுக்கி விட வேண்டும்); அதுவே ஈமானின் - நம்பிக்கையின் கடைசி நிலையாகும்." (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் விரிவான பதிவு ஒன்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸூத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்தத் தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள், அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது”, (முஸ்லிம்)

"அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" (நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்) என்ற பணியானது இஸ்லாத்தின் அதே வலுவானத் தூணாகும், அதன் மீதே ஈமானின் (இறை நம்பிக்கையின்) ஒவ்வொரு கிளையும் தாங்கி நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக, அனைத்து நபிமார்கள் (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்களும் இந்த பணிக்காகவே அல்லாஹ்வால் (தபாரக) அனுப்பப்பட்டார்கள்.

துரதிர்ஷ்டம் காரணமாக, நாம் இந்த பணியைப் புறக்கணித்து விட்டால், அதனை நாம் மறந்து விட்டால், அதை நாம் செய்வதை நிறுத்திவிட்டால், நுபுவ்வத்தின் (நபித்துவத்தின்) உண்மையான நோக்கம் சிதைந்து போய் அதன் அர்த்தத்தை இழந்துவிடும் என்று நாம் கூறலாம். இந்த சூழலில் தான் மனிதனின் முதல் செல்வமாக நாம் கருதக்கூடிய மனசாட்சியானது கெட்டுப்போய் சீரழிந்துவிடும். மனம் கணத்துப்போய் இருளாகிவிடும். பாவம் மற்றும் ஆணவத்தின் கதவு திறக்கப்பட்டு உலகம் முழுவதிலும் மக்கள் காட்டுமிராண்டிகளாக ஆகிவிடுவார்கள். மனிதனின் எந்தக் கண்டுபிடிப்பும் ஆபத்தானதாக மாறுவதுடன், அது அவனுக்கே தீங்கைக் கொண்டு வந்து விடும்.

மனிதனிடையே உள்ள உறவு ஒழுக்க ரீதியாக தாழ்ந்துப் போய்விடும். ஆனால், மனிதன் இவை அனைத்தையும் தீர்ப்பு நாளில், அல்லாஹ்வின் முன் தோன்றி அவன் தனது செயல்களுக்காகக் கணக்குக் கொடுக்கக் கூடிய நாளில் உணர்ந்து கொள்வான். இது நிறைவேறக்கூடியதும், நாம் அஞ்சக்கூடியதுமான ஒரு பெரும் துரதிஷ்டமாகும். மேலும், இது நமது கண் முன்னே அனைத்து எல்லா உண்மையுடடனும் பௌதீகமாக உருப்பெற்று விடும். (அந்நாளில் வெளிப்படையாகக் காட்சி அளிக்கும்)

அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்: இன்னும் அல்லாஹ்வின் கட்டளையானது தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (அல் அஹ்ஜாப் 33:39).

நாம் (இதனை) கூறுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளோம்: “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்”(அல்-பகரா 2:157).

அறிவு மற்றும் வழிகாட்டலின் கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டுள்ளன; நன்மை மற்றும் இந்த அறிவின் பலன் முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. இதன் விளைவாக, வெறுப்பு மற்றும் அவமதிப்பு எல்லா இடங்களிலும் படையெடுத்துவிட்டன. மனிதனுக்கும் அவனது படைப்பாளனுக்கும் இடையே உள்ள உன்னதமான மற்றும் நெருக்கமான உறவானது இப்போது இதயத்தில் இல்லை; மாறாக, மனிதர்கள், விலங்குகளைப் போலவே, ஆசைகளுக்கு அடிமையாகிவிட்டனர். நிச்சயமாக இன்றைய உலகில், முஸ்லீம்கள் அரிதாகவே இருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பரப்புவதற்காக தவிர்க்க முடியாத தியாகங்களை தாங்கிக் கொள்ள தயாராக இருப்பவர்களை கண்டுபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக உள்ளது.

தீன் - இஸ்லாம் மார்க்கம் படுகொலை செய்யப்பட்டு கீழே வீசி எறியப் ப்படக்கூடிய இந்த தற்போதைய நிலையை மாற்ற தைரியமாக நிற்கும் எந்த முஸ்லிமும், தீனை பரப்புவதற்காக நபித்துவத்தின் நடைமுறையை (சுன்னத்தை) உயிர்ப்பிக்க அவர் தன்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்து அவர் இந்த பொறுப்பை அவரது தோள்களில் ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் ஒரு படி முன்னோக்கி இருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக எல்லா மக்களிலும் மிகவும் உன்னதமான மற்றும் புகழ்பெற்றவராக கருதப்படுவார்.

இன்று, அல்லாஹ் தனது அடியார்களின் மீது கருணை காட்டி உங்கள் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவனது தீனை புதுப்பித்து இஸ்லாத்தை மீண்டும் உங்கள் இதயங்களில் கொண்டு வர அவனது கலீஃபத்துல்லாஹ்வை உங்களிடையே அனுப்பியிருக்கிறான் என்பதால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். இந்த பணியில் அல்லாஹ்வுக்கு அவனது எளிய அடியானுக்கு உதவி செய்ய நேர்மையான இதயத்துடன் எவர் முன் வருவாரோ, அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி ஆவார். மேலும், அவருக்கு அல்லாஹ்விடமிருந்து மகத்தான கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் தூதருடைய காலம் [வரலாற்றின் ஒரு (சிறப்பு மிகு) காலம்] இது அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!.

எனவே, நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்களின் பரிபூரணமான மற்றும் கீழ்ப்படிதலுள்ள தொண்டனாக இருக்கின்ற அல்லாஹ்வின் நபியை- தூதரை எவர்கள் அடையாளம் கண்டு உறுதியாக நம்பிக்கை கொண்டு (அவருக்கு) கட்டுப்படுவார்களோ, பின்னர் உலகில் அல்லாஹ்வின் ஒளியை உலகில் பரப்பும் மனத் திறனை அந்த மனிதரும் பெற்றுக்கொள்வார். இன்னும் "அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" (நன்மையை ஏவுதல் தீமைகளைத் தடுத்தல்) என்ற இப்பணியை செய்யும் ஆற்றலையும் அவர் பெற்றுக்கொள்வார்.

உலகம் துயரம் மிகுந்த வேதனையில் இருந்து கொண்டிருக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சிந்தனை செய்ய நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரவி வரும் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சியத்திற்குப் பின்னால் மிகத் தெளிவான காரணங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ், அடுத்த வெள்ளிக்கிழமை எனது குத்பாவில் நான் இந்த காரணங்களைப் பற்றி கூறுவேன்.

மனிதனின் முயற்சியும், உறுதியான நம்பிக்கையும் இன்றி, அல்லாஹ் அவனது மூச்சுக் காற்றை [அதாவது இறைவனின் ஆவியில் உள்ள உயிரை] மனிதனின் வாழ்வின் மீது வைக்க மாட்டான் என்பதை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனிடம் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அல்லாஹ்வின் அற்புதங்களின் தெளிவான சான்றை காண்பதற்காக மனிதன் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் அவர் முயற்சி செய்யும் போது, அல்லாஹ் அவருடன் இருக்கிறான் என்பதற்கான அடையாளங்களை அவர் காண்பார் மேலும் தாவத்-இ- இல்லல்லாஹ் - வின் அது பற்றிக் கூறுவதென்றால் மற்ற மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தலின் பணியை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் அடையும்போது அவர் அல்லாஹ்வின் ஆதரவைப் பெறுவார்.

அல்லாஹ்வின் தூதரின் காலகட்டத்தில், நமது தற்போதைய காலத்தைப் போன்றே, இந்த தூதர்- சீர்திருத்தவாதியின் உண்மையான ஸஹாபிகள் அவரையும், அவரது குறிக் கோள் - பணியையும் உறுதியாக நம்புகின்றார்கள். இந்த பணியில் அவருக்கு உதவ அவர்கள் எதையும் செய்யத் தயாராக உள்ளனர், மேலும் அவரது பணியிலும், அல்லாஹ்வின் தூதராகிய, அவனது கலீபத்துல்லாஹ்விற்கு மேலிருந்து இறங்கும் வெளிப்பாடுகளிலும் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருப்பதில்லை. அதன் பிறகு,

அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் அத்தகைய வழிகளைத் திறக்கிறான், அதனால் அவர்களும் "நன்மை செய்தல் [ஏவுதல்] தீமைகளைத் தடுப்பது" என்ற தங்களது பணியைச் செய்யும் திறனைப் பெற்றுக் கொள்வார்கள். மேலும் இந்த பணியில் அவர் தடுமாறாமல் இருந்தால், அல்லாஹ் இந்த வகையான நபரைப் பற்றி மகிழ்ச்சியடைவான். ஏனென்றால், ஒரு சிறிய தவறு (கூட) அவரது நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்.

ஆகவே, ஓர் உண்மையான முஃமின் உறுதியாகவும், நேர்மையாகவும் இருந்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, காலம் கனியும் போது, ​​அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளின் கதவைத் திறந்து விடுவான்.

இன்ஷா அல்லாஹ், ஆமீன்.