யார் மார்க்க சீர்திருத்தவாதி!

வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ்
(அலை) அவர்கள் கூறினார்கள்:

இந்நிலையில் உங்களுக்கு நான் கூறுவேன், உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்! மார்க்க சம்பந்தமான காரியங்களைச் சீர்படுத்தி விருத்தி செய்வதற்காக ஒருவர் உங்களிடம் வந்துவிட்டார். ஆனால் நீங்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இதோ உங்கள் முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருப்பவர் அவரே உங்களுடைய கண்கள் கனத்த திரையினால் மூடப்பட்டுள்ளன. உங்கள் உள்ளங்கள் உண்மையைத் தேடுகிறதென்றால் "இறைவனோடு உரையாடுவதாக வாதம் புரியும் ஒருவரைச் சோதிப்பது மிகவும் எளிதாகும்."அவரிடம் வாருங்கள், அவருடன் இரண்டு மூன்று வாரங்கள் வாழ்ந்து பாருங்கள். இறைவன் நாடினால் அவர் மீது பொழிந்து கொண்டிருக்கும் இறையருள்களின் மழையையும், அவர் மீது இறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான இறைவெளிப்பாட்டின் ஒளிகளையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டு கொள்வீர்கள். தேடுகிறவன் கண்டு கொள்வான். தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும். மூடப்பட்ட ஓர் இருண்ட அறையினுள் ஒளிந்து கொண்டு சூரியன் எங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டினால் அது வீணானது. முழுக்க முழுக்க நீயே வீணாக்கிய காரியமாகும். முட்டாளே உனது கண்களை மறைக்கும் திரையை அகற்று. அப்போது நீ சூரியனைக் காண்பது மட்டுமல்லாமல் அதனால் ஒளியூட்டவும் பெறுவாய். (இஸ்லாத்தின் வெற்றி பக்கம் 66, 67)