சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் இறை அருளின் நோக்கம்!

ஹஸ்ரத் முஹையுதீன்

அல் 
கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) போதிக்கின்றார்கள். 

அல்லாஹ் தனதுத் தூதருடைய உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக, இறை வெளிப்பாட்டைத் தாராளமாக ஒரு சத்தியத்தைத் தேடுபவருக்கு கிடைக்கச் செய்கின்றான். அத்துடன், அவரை "பரிசுத்த ஆவியுடனும் பேச வைக்கின்றான்". இவ்வாறு பரிசுத்த ஆவியை அவர் அடைவதன் மூலம்,
அவருக்கு அல்லாஹ்வின் மீதும், அவன் அனுப்பிய தூதரின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டு, அந்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்க்கும் அதுக் காரணமாக அமைகின்றது. எனினும் இத்தகைய அருட்கொடையைப் பெற்றவர்கள், அல்லாஹ்வுடைய தூதரின் மீது பொழியப்படும் இவ்வாறான இறை வெளிப்பாடுகளுக்கு சாட்சியாகவும் இருக்கின்றார்கள். அத்துடன், அல்லாஹ்வுடைய தூதருடைய உண்மைத்துவத்தையும், இறை வெளிப்பாடுகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தாங்களே அவ்விறை வெளிப்பாடுகளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறு இருந்தபோதிலும், சிலரோ இவ்வாறு பெறப்படும் அவ்விறை வெளிப்பாடுகள் அனைத்தையும் தங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள வெறும் மாயை என்பதாகக் கருதி, அவை அனைத்திலிருந்தும் தங்களுடைய முகங்களை அவர்கள் திருப்பிக் கொள்கின்றார்கள். இதுவொரு மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். இவ்வாறான மக்களே மக்களில் மிகவும் துரதிர்ஷ்டமானவர் ஆவார்கள். ஏனெனில், அவர்கள் சத்தியத்தை உணர்ந்துக் கொண்டதன் பிறகும், அச்சத்தியத்தை அசத்தியம் என்றும் மாயை என்றும் கூறுகின்றார்கள். இதனையே, இறை சத்தியத்திலிருந்து தங்கள் முதுகுகளை திருப்புவதற்கு ஒரு சாக்காகவும் கூறுகின்றார்கள்.