அஹ்மதி சகோதரர்களின் கவனத்திற்கு!

கொரோனா என்னும் கொடிய உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நோயை கட்டுபடுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று உலக வல்லரசு நாடுகளே கூறும் அளவுக்கு இந்த நோயின் கோரதாண்டவம் உள்ளது.

அஹ்மதி சகோதர்கள் இது இறை தண்டனையாகவே கருதி வந்த நிலையில், அஹமதியா ஜமாத்தின் தலைவரான மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் சாஹிப் அவர்கள் இது தொடர்பாக கூறும்போது

"இது இறை தண்டனையாக கருத முடியாது" என்றும் "இது இறை தண்டனை என்று நான் அறிவிக்கவில்லை" என்கிறார்.

அஹ்மதி சகோதரர்களே!, உங்களிடம் பணிவோடு சில கேள்விகள் கேட்கிறோம்!

மஸ்ரூர் ஸாஹிப் 2003 கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 2020, இந்த இடைபட்ட காலகட்டத்தில் இவர் எத்தனை இறை தண்டனைகளை அறிவிப்பு செய்துள்ளார்?

இறை தண்டனையை அறிவிப்பு செய்யவேண்டும் என்றால், இறைவன் புறமிருந்து வஹி அதாவது இறை அறிவிப்பை பெறுபவர் மட்டுமே இதை செய்ய முடியும் அல்லவா?

இது வரை அவர் தனக்கு இறைவன் புறமிருந்து இறை வெளிப்பாடு ஏதும் வந்ததாகவோ, தான் கஷ்ஃபு காட்சி ஏதும் கண்டதாகவோ, கூறவில்லையே?

அப்படி என்றால் இவர் எப்படி இறை தண்டனையை அறிவிப்பு செய்ய முடியும்?

அஹ்மதி சகோதர்களே! இப்போது நீங்கள் சிந்திக்க கடமை பட்டுள்ளீர்கள். எந்த மதத்தில் இறை "வெளிப்பாடு இல்லையோ அந்த மதம் மரணித்துவிட்டதாக" ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றை நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படி என்றால் தற்போதைய அஹ்மதிய்யா ஜமாத்தின் நிலை என்ன?

காலத்தின் இமாம் என்பவர், இல்ஹாம்கள் மற்றும் ஆன்மீக காட்சிகள் மூலமாக மக்களை வழி நடத்துவார், என்று மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றிற்கிணங்க, இந்நூற்றாண்டின் இமாமும், கலீஃபத்துல்லாஹ்வும் ஆகிய ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள், கொரோனா சம்பந்தப்பட்ட இறை அறிவிப்பை பெற்று, அது இறை தண்டனை என்று அறிவித்துள்ளார்கள். அதை கீழே தருகிறோம்.

எனவே அஹ்மதி சகோதரர்களே! கிளையை பிடிக்காமல் வேரை பிடிப்பதே புத்திசாலித்தனம் என்று மஸீஹ்(அலை) அவர்கள் கூறியதை நினைவில் கொண்டு, மனிதனால் தேர்ந்தெடுக்கபட்ட தலைவர்களுக்கு பின்னால் செல்லாமல் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கபட்ட அல்லாஹ்வின் கலீபாவை ஏற்று கொண்டு, இந்த இறை தண்டனையான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோயில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தற்காத்து கொள்ளுங்கள். இப்போது அன்னார் கூறுவதை கவனியுங்கள்

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

அல்ஹம்துலில்லாஹ்... இந்த நூற்றாண்டின் இறைவெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்ட எனது அன்பிற்குரிய ஸஹாபிகள் அனைவரும் ஒப்பீட்டு அளவில் இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்!

இதைக் கருத்தில் கொண்டால், எனது இந்த முடிவானது அரசாங்க நடவடிக்கைக்கு முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

எனது சமுதாயத்தைச் சார்ந்த மக்கள், இறை வெளிப்பாடுகளின் மீது "உளப்பூர்வமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள்," இந்நூற்றாண்டின் இறைவனால் தேர்தெடுக்கபட்ட இந்த எளியவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அடியானுக்கு எதிராக 'நயவஞ்சகம்' செய்யாதவர்கள், எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல், எனக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர்களாகிய, எனது அன்புக்குரியவர்கள், கொரோனா வைரஸிலிருந்து ஒப்பீட்டு அளவில் பாதுகாப்பாக இருப்பார்கள்! என எல்லாம் வல்ல இறைவன் இறை வெளிப்பாட்டின் மூலம் எனக்கு அறிவித்துள்ளான். இன்ஷாஅல்லாஹ்.

இறைவனின் உதவியுடன் எனது உண்மையான அடியார்கள் ஒப்பீட்டு அளவில் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக மேலும் பாதுகாக்கப் படுவார்கள்.

நான் சொல்வதை கேட்டு சிலர் ஏளனமாக சிரித்தாலோ, இன்னும் பிறர் என்னை பைத்தியம் என்று அழைத்தாலோ, என்னை ஏளனம் செய்ய முயற்சிக்கும் நபரை அவன் தண்டிப்பான் என்றும், ஏற்கனவே எழுச்சியடைந்துள்ள அவனது கோபம் அவரை அழித்துவிடும் என்றும் அல்லாஹ் (ஸுபுஹ்) எனக்கு வெளிப்படுத்தியுள்ளான். பல உயிர்கள் அழிக்கப்படும். ஆனால், அவன் என்னிடத்தில் கூறினான்,

"என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியானே! உம்மை உண்மையாக ஏற்றுக் கொண்டவர்களுக்காக, உங்கள் இருதயத்தை வருத்திக் கொள்ளாதீர்! அவர்கள் ஒப்பீட்டு அளவில் காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்"

அல்ஹம்துலில்லாஹ்