உம்மத்தின் நோய்கள் (ஜும்ஆ உரை)

03 ஜூன் 2022

02 துல் கஹ்தா 1443ஹி

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) தனது ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹுது, தவ்வூத் மற்றும் சூரா அல் பாத்திஹா ஓதிய பிறகு; ஹஸ்ரத் முஹையுத்தீன் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 1) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறியாமை, பாவம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் இருளில் உலகம் மூழ்கி இருந்த போது,

உண்மையான அறிவு மற்றும் வழிகாட்டுதலின் ஒளி (மக்காவைச் சுற்றியுள்ள சிறிய மலைகளான)

பத்தாவின் பாறை மலைகளுக்கு மத்தியில் அடிவானத்தில் தோன்றியது. அதன் கதிர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரவியது.. அவை பூமியின் ஒவ்வொரு மூலையையும் ஒளிரச் செய்துள்ளன; குறுகிய காலத்தில் [இருபத்தி- மூன்று வருடங்களில்], இந்த ஒளி மனிதன் முன்னர் ஒருபோதும் அடைந்திராத உயர்ந்த பதவிகளை அடைவதற்கு வழி வகுத்துள்ளது. இது முஸ்லிம்களை மூட நம்பிக்கையிலிருந்து அகற்றி உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை அவர்களில் உருவாக்கியது. இந்த ஒளியால் வழி நடத்தப்பட்டு, முஸ்லிம்கள் வெற்றிக்கு மேல் வெற்றியை அடைந்தார்கள். மேலும் அவர்கள் வரலாற்றில் மிக உயர்ந்த கௌரவம் மிக்க பதவியை வந்தடைந்தனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் மகத்துவத்துடனும், அதிகாரத்துடனும் உலகை ஆண்டனர்; அந்த நேரத்தில் வாழ்ந்த எந்த தலைவனுக்கும் (அவர்களை) எதிர்க்கும் தைரியம் இருந்ததில்லை; எப்போதாவது எந்த ஆட்சியாளராவது அவ்வாறு செய்யத் துணிந்தார் என்றால், அவர் முற்றிலுமாக அழிக்கப்படும் அபாயம் இருந்தது.

இது ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாத வரலாற்று உண்மையாகும். ஆனால், இன்றைய காலத்தில் இந்த வரலாற்று உண்மை ஒரு பழங்கால கதைகள் போன்று (மரபு வழிச் செய்தியாக) ஆகிவிட்டது. இதனை ஒரு கடந்த கால கதையாக கூறுவதற்கு மட்டும் நன்றாக இருக்கிறது. (ஆனால் பின்பற்றுவதற்கு அல்ல) என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். [இன்றைய முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில் ஒரே மாதிரியாக] இது ஒரு நம்பமுடியாததாகவும் கேலிக்குரியதாகவும் தோன்றலாம். குறிப்பாக, தற்போதைய சூழலில், இஸ்லாத்தின் முதலாவது மற்றும் உண்மையான வீரர்களின் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் சிறந்த சாதனையின் மீதான முஸ்லிம்களின் (இன்றைய) நடவடிக்கை யானது ஒரு பெரிய கரும்புள்ளி போன்று ஆகிவிட்டது.

முஸ்லிம்களை எந்த நோய் கடந்து வந்துள்ளது?

ஹிஜ்ரி பதின்மூன்றாம் ஆண்டு முடியும் வரை முஸ்லிம்கள் மட்டுமே மரியாதை, கண்ணியம், அதிகாரம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது.ஆனால் நாம் நமது கண்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து திருப்பி இன்றைய முஸ்லிம்களைப் பார்க்கும்போது, ​​கஷ்டங்களிலும், அவமானத்திலும் மூழ்கியிருக்கும் ஒரு சமூகத்தை நாம் காண்கிறோம், உண்மையான பலம், அதிகாரம், மரியாதை அல்லது கண்ணியம் இல்லாத, சகோதரத்துவம் இல்லாத, இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத, மக்களைக் காண்கிறோம். ஒரு காலத்தில் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருந்த அசாதாரணமான செயல்களின் எந்த தடயத்தையையும் நாம் இன்று காண முடியவில்லை. இப்போதெல்லாம், நாம் அரிதாகவே தூய மற்றும் நேர்மையான மனசாட்சி கொண்ட முஸ்லீமைக் காண்கிறோம்.அதற்கெதிரில், முஸ்லிம்கள் தீமைகள் மற்றும் பாவங்களில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

அவர்கள் நற்செயல்களின் பாதையில் இருந்தும், வெற்றிக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்கும் பாதையில் இருந்தும், வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டனர். முஸ்லிம்களின் பலவீனங்களை மகிழ்ச்சி, கேலி மற்றும் வெறுப்புடன் இன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் பேசவும், விவாதிக்கவும் செய்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பிரச்சனை அத்துடன் நிற்கவில்லை.இந்த புதிய தலைமுறையின் முஸ்லிம் இளைஞர்கள் நவீன போக்குகள் என்று அழைக்கப்படுபவைகளாலோ, இன்னும் மேற்கத்திய நாகரீகத்தினாலோ (ஃபேஷன்), ஈர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மேற்கத்திய நாகரீகமானது இஸ்லாத்தின் கொள்கைகளை கேலி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் அவர்கள் ஷரீஅத்தை, இஸ்லாத்தின் தூய நெறிமுறையை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்; ஷரீஅத் பழமையானது என்றும் நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் அத்தகைய நடத்தையால் நாம் ஆச்சரியப்படுகிறோம்! -

வலிமை, ஸ்திரத்தன்மை, செழிப்பு, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை முழு உலகிற்கும் கொண்டு வந்த மக்கள், தற்போதோ

அவர்கள் மனச்சோர்வு அடைந்தவர்களாகவும், முற்றிலும் உறங்குபவர்களாகவும், ஒன்று மற்றவர் களாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.ஒரு காலத்தில் முழு உலகிற்கும் நல்லொழுக்கப் பாடங்களையும் நல்ல நடத்தையையும் கற்றுக் கொடுத்த மக்களோ, தற்போது இந்த நற் குணங்களில் இருந்து பின்தங்கி விட்டனர்.

நிலைமையை மாற்றுவதற்கான முதல் முயற்சிகள்

நீண்ட காலமாக, அறிஞர்களும், இஸ்லாத்தின் பாதுகாவலர்களும், அவர்களது சமூகத்தின் பேரழிவுக்குரிய நிலைமையை குறித்து ஆழ்ந்து சிந்தித்து முஸ்லீம்களை சீர்திருத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவர்களின் பணியைச் செய்ய முடியவில்லை!

அவர்கள் பயன்படுத்திய தீர்வுகள் மற்றும் முடிவுகள் நோயை மேலும் மோசமாக்கியது.

நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது, வரவிருக்கும் நாட்கள் இன்னும் இருண்டதாக இருக்கும் என்பதாகத் தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டு திருப்தியாக இருப்பது பெரும் பாவமாகவும், மன்னிக்க முடியாத குற்றமாகவும் ஆகிவிட்டது. ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு,அத்தகைய ஒரு மோசமான நிலைமையை

கொண்டுவரும் உண்மையான காரணத்தை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இந்த சீரழிவுக்கு மக்கள் பல காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நிலைமை இன்னும் மோசமடைவதில் இருந்து தடுப்பதற்கு பல தீர்வுகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இன்னும் அதிகமான விரக்திக்கே வழிவகுத்துள்ளன. முன்னேற்றத்தின் பக்கம் செல்வதற்கு பதிலாக, குறிப்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மத்தியில் விரக்தியும் குழப்பமும் உள்ளே வந்துவிட்டது. உண்மை என்னவென்றால் இந்த நோய்க்கான உண்மையான வேரைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார்கள் என்பதாகும். இந்த நோய்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கப்படாத வரை, முஸ்லிம்களால் எந்த சிகிச்சையையும், அதைப் பயன்படுத்துவதற்கு அதற்கும் குறைவான ஒன்றை பரிந்துரைக்கவும் முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நிவாரணத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நம்மால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நோயின் உண்மையான காரணத்தை அறியாமல் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு சிகிச்சையும் நிலைமையை மேலும் சீர்கெடச் செய்து அதிகமான குழப்பத்தையும் ஊக்கமின்மையையும் கூட கொண்டு வந்து விடும்.

பிரச்சனையை எவ்வாறு பார்க்க வேண்டும்?

‘ஷரீஅத்’ என்பது அல்லாஹ்விடம் இருந்து நேரடியாக வருகின்ற ஒரு புனிதமான செயல்முறை விதிகளாகும் என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. இது நமக்கு ஒரு முழுமையான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கான ஒவ்வொரு சாத்தியமான வழிவகைகளையும்

உண்மையான வெற்றியையும், நன்மைக்கான பாதையில் முன்னேற்றத்தையும் நமக்கு வழங்குகிறது. நாம் எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டி, அந்த பாதையை சரிபார்த்து செயல்படுத்துவதற்கான முறைகளையும் நமக்குக் கூறுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹம்மதிய்ய உம்மத்தின் ஷரீஅத்தானது அனைத்து முஸ்லீம்களின் பௌதீக மற்றும் ஆன்மீக நல்வாழ்விற்கும், வாழ்நாள் முழுவதும் எல்லா சந்தர்ப்பங்களிலும், ஏன் கியாமத் நாள் வரை அவர்களின் முன்னேற்றத்திற்கும் முழு உத்திரவாதம் வழங்குகின்றது. ஷரீஅத்தின் விதிமுறைகளுக்கும் அப்பால் (சென்று), மோசமடைந்துள்ள இந்த தற்போதைய சூழ்நிலையின் காரணத்தையும் தீர்வையும் நாம் தேடினோம் என்றால், நாம் நமது நேரத்தை இழக்க நேரிடும் என்பதுத் தெளிவாகிறது. எனவே, நாம் அவசியமாக குர்ஆன்-ஏ-கரீமை ஆழமாக ஆராய வேண்டும். குர்ஆன்- அதுவே ஷரீஅத்தின் அடிப்படையும் அனைத்து ஞாணங்கள் மற்றும் மனிதகுலம்

அனைத்திற்குமான வழிகாட்டுதலின் மூலாதாரமும் ஆகும்.

நிச்சயமாக மனிதனுக்கான ஞானத்தின் ஒரே மூலாதாரம் குர்ஆன் மட்டுமே ஆகும். நாம் நமது நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் நாம் நமது சிரமங்கள் என்ன என்பதை கண்டுபிடித்து அதனை எவ்வாறு அகற்றுவது என்பதற்கு நாம் குர்ஆனின் உதவியை நாட வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்தவுடன் நாம் தீர்வைப் புரிந்துகொண்டு அதைப் பயன் படுத்துவதற்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். குர்ஆனின் ஞானமும் வழிகாட்டுதலும் குறிப்பாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் தற்போதைய சூழலிலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நம்மை ஒருபோதும் கைவிடாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் குர்ஆன் மற்றும் சுன்னத்தில் உள்ள உண்மையான தீர்வை [சிகிச்சையைத்] தேடுவோம்.

பிரச்சினைகளை நாம் ஆராய்வோம்!

முழு பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய அல்லாஹ் (தபாரக்), ஆட்சி செய்யும் அதிகாரத்தையும், பூமியில் மீதான கிலாஃபத்தையும், உண்மையான முஸ்லிம்களுக்கு அதாவது முஃமீன்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். இது திருக் குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது:

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கிறான்".(அந் நூர் 24:56)

உண்மையான நம்பிக்கையாளர்கள் எப்போதும் நிராகரிப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற உத்தரவாதத்தையும் கூட அவன் வழங்குகிறான், என்றும் அதனால் நிராகரிப்பவர்கள் ஆதரவாளர்களோ அல்லது உற்ற நண்பர்களோ இல்லாமல் பின்தங்கி இருப்பார்கள் என்று இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

"நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்" (அல் ஃபத்ஹ் 48:23)

உண்மையான முஸ்லிம்களுக்கு சாத்தியமான உதவிகள்

அனைத்தையும் வழங்க அல்லாஹ் (தபாரக்) தானே பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதையும், இந்த மக்கள் எப்போதும் கண்ணியத்தையும் புகழையும் பெறுவார்கள் என்பதற்கு அவன் உறுதியளித்துள்ளான் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இது பின்வரும் இந்த வசனங்களின் மூலம் உறுதிப் படுத்தப் படுகின்றது:

“முஃமின்களுக்கு - நம்பிக்கை யாளர்களுக்கு உதவி புரிதல் நம் மீது கடமையாகும்". (அர் ரூம் 39:48)

“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (ஆல இம்ரான் 3: 140)

“கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது” (அல் முனாஃபிகூன் 63:9)

இந்த புனிதமான அறிவிப்புகள் முஸ்லிம்களுக்கு, அவர்களது கண்ணியம்,மகத்துவம், பெருமை, மரியாதை மற்றும் மதிப்பை

மீட்டெடுக்கும் பாதையை தெளிவாக நிரூபிக்கின்றன. அது உண்மையில் திடமான ஈமான்அதாவது நம்பிக்கையில் உள்ளது. அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் அவர்களின் தொடர்பு உறுதியாகவும், உண்மையாகவும் இருந்தால், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தி வழி நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், மறுபுறம், அவர்களின் நம்பிக்கை பலவீனமாகிவிட்டாலோ அல்லது இதயத்திலிருந்து வெளியேறி விட்டாலோ, தானாகவே நாம்அதாவது முஸ்லிம்கள் நிலைகுலைந்து, நமக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடும். இந்த குர்ஆன் வசனத்திலிருந்து இது தெளிவாகிறது:

"காலத்தின் மீது சத்தியமாக!நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர! (அல் அஸ்ர் 103:2-4)

முன்பு விளக்கியதைப் போன்று, ஆரம்பகால முஸ்லிம்கள் கௌரவத்திலும் மகத்துவத்திலும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அதேவேளையில் நவீன கால முஸ்லிம்கள் எதிர்திசையில் சென்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஆரம்பகால முஸ்லிம்களின் ஈமான் திடமாகவும் நேர்மையாகவும் மேலும் அவர்களின் குணாதிசயங்கள் மிகச் சிறந்ததாகவும் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த உயர்நிலையை அடைந்தார்கள் என்பது இவ்வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களின் நிலை தற்காலத்தில் வருந்தத்தக்கதாக ஆகிவிட்டது. ஏனெனில் ஆரம்பகால முஸ்லீம்களிடம் நாம் காணும் தன்மைக்கு எதிரானதாக அவர்களின் நம்பிக்கையிலும் அவர்களின் குணங்களிலும் பல பலவீனங்கள் உள்ளன.எனவே, இனைறைய முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லீம்களாக உள்ளனர் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

இதே சூழல் நிலவுவதை அல்லாஹ்வின் உண்மையான தூதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்

முன்னறிவித்தார்கள் : "விரைவில் ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாம் பெயரளவில் மட்டுமே இருக்கும் குர்ஆன் அதன் எழுத்தளவில் மட்டுமே இருக்கும்”.

இன்றைய முஸ்லிம்களுக்கு இது தெளிவாகப் பொருந்தும். இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்த குறிப்புகளை கூடிய விரைவில் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும்:

1. அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் அங்கீகரிக்கப்பட்ட, ஆன்மீக மற்றும் பௌதீக முன்னேற்றத்தை கொண்டுவரக் கூடிய உண்மையான இஸ்லாம் எங்கும் இல்லை என்பது உண்மை. அவ்வாறாயின் எந்த வழிவகைகளில் அந்த உண்மையான இஸ்லாத்தை நம்மால் மீண்டும் கண்டுக் கொள்ள முடியும்?

2. இந்த உண்மையான இஸ்லாத்தின் மறைதல் எதனால் ஏற்பட்டது? அதனுடன் சேர்ந்து 'இஸ்லாத்தின் (ரூஹ்) ஆன்மா' அழிவுக்கு காரணமான முஸ்லிம்களின் வாழ்க்கையை விட்டு ஏன் வெளியேறியது?

நாம் குர்ஆனைப் படிக்கும்போது, ​​உண்மையான ஈமானையும் இஸ்லாத்தையும் தேவையான அளவில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைத் தெளிவாகக் காண்போம், பின்னர் கண்ணியம் மற்றும் பெருமையின் பதவிகளை அடைதல் என்பது சிறப்புப் பணியைச் சார்ந்து இருக்கிறது. அதனை அல்லாஹ் (தபார) தனது எல்லையற்ற அருளால் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்குகிறான். இதன் காரணமாகவே குர்ஆனில் முஸ்லிம்களுக்கு கைருல்-உம்மத் (மக்களில் சிறந்தவர்கள்) என்ற

இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தீன்-ஏ-இஸ்லாத்தின் படி,

அல்லாஹ்வின் புனிதத்தன்மை, தனித்துவத்தன்மை மற்றும் உன்னத இருப்பை நிறுவி நிரூபித்து மனிதர்கள் மூலம் அவனது எல்லையற்ற ஆற்றல்களையும்,

வரம்பில்லா குணங்களையும் காட்டுவதே பிரபஞ்சத்தை படைத்ததற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் ஆகும்.

உண்மையான அறிவின் ஒளியைக் கொண்டு மனிதனை வழிநடத்த முடியும், ஆனால் அதற்கு முன் அவர்

முதலில் அனைத்து அசுத்தங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளிலிருந்தும் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தூய்மைப் படுத்துதலுக்குப் பிறகுதான்

மனிதன் தன்னைத் தானே நல்ல குணங்களுடன் சரியாக்கிக் கொண்டு சிறந்த குணத்தையும் நன்மை செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே அல்லாஹ் (தபாரக) மனிதனை தூய்மைப்படுத்தி [இன்சான்] அவனுக்குள் நன்மை செய்யும் திறனை வளர்த்தான்.மேலும்

முழு மனித இனத்தின் பரிபூரணமானவர் அனைத்து தூதர்களின் தலைவரான, நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் மூலமாகவே மனித இனம் முழுமையான தூய்மைப் படுத்துதலை அடையும் வரை மனம் மற்றும் உடலின் வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

அப்போதுதான் மனிதன் பின்வரும் வசனத்திலன் (மூலம்) நற்செய்தி கிடைக்கப் பெற்றான்:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது எனது அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்". (அல் மாயிதா 5:4)

மனிதனது படைப்பின் மிக உயர்ந்த நோக்கம் இறுதியாக நிறைவேறியது [இஸ்லாத்தில் நிறைவேறியது]; நன்மையும் தீமையும் தெளிவாக பிரிக்கப்பட வேண்டும்; ஒரு முழுமையான வாழ்க்கை முறை வெளிப்படுத்தப்பட்டது; மேலும் மிக முக்கியமானது (ஷரீஅத்) சட்டத்தைத் கொண்டுள்ள நுபுவ்வத்தின் முன்னறிவித்தலின் சங்கிலி மற்றும் நபித்துவம் [நுபுவ்வத்] - முடிவடைந்து விட்டது, ஆயினும் அல்லாஹ் (தபாரக்) இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களின் நிலைத்திருத்தலுக்காக, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் சீர்திருத்தும் பணியை நிறை வேற்றுவதற்காக குர்ஆன் மற்றும் நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் சுவாசத்திலிருந்து வருகிற ஓர் இஸ்லாமிய நுபுவ்வத்தை பாதுகாத்து வைத்துள்ளான்.

தற்போது, ​ அத்தகைய ஒரு தீர்க்கதரிசி-சீர்திருத்தவாதியின் முன்னிலையில், இஸ்லாம் தனது வாழ்வை மீண்டும் பெறுகிறது, ஆனால் அவர் இல்லாத நிலையில், அத்தகைய சீர்திருத்தவாதி இன்னும் தோன்றவில்லை என்றால், பிறகு இஸ்லாத்தைப் பாதுகாப்பது உம்மத்தே முஹம்மதியாவின் (அதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் முழுவதின் கூட்டமைப்பு) இன் கூட்டான பொறுப்பாக உள்ளது.

இந்தப் பொறுப்பு பின்வரும் குர்ஆன் வசனங்களில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது:

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக (முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடிய) நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஆல இம்ரான் 3:111)

"(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்". (ஆல இம்ரான் 3:105)

முதல் வசனத்தில், முஸ்லிம்கள் ஏன் 'கைருல் உம்மத்' (மக்களில் சிறந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் (தபாரக) குறிப்பிட்டுள்ளான். அவர்கள் நல்லதை ஊக்குவித்து தீமையை தடை செய்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம் ஆகும். இரண்டாவது வசனத்தில் இந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் [பூமியின் மீதான] இந்த (உலக) வாழ்வில் வெற்றியடைந்து கௌரவத்தை- கண்ணியத்தை பெறுவர் என்பதை அல்லாஹ் (தபாரக) தெளிவுபடுத்தியுள்ளான்.

இந்த கட்டளை இத்துடன் நிற்காது. நாம் இந்த அவசியமான பணியைச் செய்யவில்லை என்றால்,பிறகு சாபமும் பேரழிவும் நம் மீது ஏற்பட்டுவிடக்கூடும் என்று மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளான்.(இறைவனது) இந்தத் தீர்மானத்தை (பின்வரும்)இந்த வசனத்தில் நம்மால் காண முடியும:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்". (அல் மாயிதா 5: 79-80)

ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் கூட இதனை விரிவாக விளக்கி, இந்த குர்ஆன் வசனங்களை இன்னும் தெளிவாக்குகின்றன.

அடுத்த வாரம் எனது குத்பாவில் இந்த ஹதீஸ்களுடன் வருகிறேன்.

உம்மத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைகளை மற்றும் ஒருவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி தொடர்ந்து விளக்கவும் இந்தப் பிரச்சனைகளை நீக்கி இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை [மீண்டும் ஒருமுறை] செயல்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவானாக! ஷைத்தான் நம்மைப் பிளவுபடுத்தவும், நம்மிடையே பிரச்சனையையும் குஃப்ரை [அவநம்பிக்கையை]யும் விதைப்பதற்கு,

எல்லா வகையிலும் முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லீம்களை தமதுத் தூக்கத்திலிருந்தும் எழுந்திருக்க அல்லாஹ் அனுமதிப்பானாக! அல்லாஹ் இந்த முக்காடுகளை அகற்றி, இஸ்லாமியர்களை இஸ்லாத்திற்கு எதிரான போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும், அச்சத்துடனும்

அவன் நம்மை உண்மையான இஸ்லாதை நோக்கி முன்னேறச் செய்வானாக! ஆமீன்!