நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :-

“ஓர் இறை தூதர், நபி, முஹத்தஸ் படைப்பினங்களின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்கும் போது அவருடன் கண்டிப்பாக வானவர்கள் இறங்குகின்றனர். அவர்கள் நல்ல உள்ளங்களில் நேர்வழியை இட்டுச் செல்கின்றனர். நன்மையைத் தூண்டுகின்றனர். இறை மறுப்பு, வழிகேடு எனும் இருள் நீங்கி ஈமான், நேர்வழி எனும் உண்மையான விடியற்காலை தோன்றும்வரை வானவர்கள் இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வின் வழக்கம் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது.”

(ஃபத்ஹே இஸ்லாம் பக்கம் : 18 அடிக் குறிப்பு)